
செய்திகள் மலேசியா
அரசாங்கத்தில் உள்ள மானிய, கடனுதவித் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை சிறு, குறு, நடுத்தர வணிகர்கள் கொண்டிருக்க வேண்டும்: டத்தோ அப்துல் மாலிக்
பெட்டாலிங் ஜெயா:
அரசாங்கத்தில் உள்ள மானிய, கடனுதவித் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை சிறு, குறு, நடுத்தர வணிகர்கள் கொண்டிருக்க வேண்டும்.
மலேசிய வர்த்தக சங்கங்களின் சம்மேளத்தின் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் மாலிம் அப்துல்லா இதனை கூறினார்.
நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர வணிகர்களின் மேம்பாட்டிற்காக அரசாங்கம் பல்வேறான திட்டங்களை கொண்டுள்ளது.
இத்திட்டங்கள் மானியமாகவும் கடனுதவியாகவும் வணிகர்களுக்கு பெரும் பயனாக இருந்து வருகிறது.
அதே வேளையில் நாட்டில் உள்ள வங்கிகள் உட்பட தனியார் நிறுவனங்களின் வாயிலாகவும் பல உதவித் திட்டங்கள் உள்ளன.
ஆனால் இத்திட்டங்கள் வணிகர்களை சென்றடைகிறதா என்பது தான் மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.
அதே வேளையில் இத்திட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட வணிகர்கள் தகுதியானவர்களா என்பதும் கேள்விக்குறியாக தான் உள்ளது.
அவ்வகையில் நிஷானா அறவாரியம் ஏற்பாடு செய்துள்ள ஃபிளேம்ஸ் மாநாடு, கண்காட்சி வர்த்தகர்களுக்கு பெரும் பயனையளிக்கும் என நம்புகிறேன்.
இங்கு 20க்கும் மேற்பட்ட அரசாங்க இலாகாக்கள், தனியார் நிறுவங்கள் இங்கு முகப்பிடங்கள் அமைத்து வருபவர்களுக்கு உரிய விளக்கங்களை தந்து வருகின்றனர்.
ஆகவே இதுபோன்ற முயற்சிகள் தொடர வேண்டும் என்று டத்தோ அப்துல் மாலிக் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 5:04 pm
அன்னையர்களின் தியாகங்களுக்கு உரிய அங்கீகாரத்தை செய்வோம்: பிரபாகரன்
June 2, 2025, 1:17 pm