
செய்திகள் மலேசியா
BREAKING NEWS: பொருளாதார அமைச்சர் பதவியை ரபிஸி ரம்லி ராஜினாமா செய்தார்
புத்ராஜெயா:
கெஅடிலான் துணைத் தலைவருக்கான தேர்தலில் நூருல் இசா அன்வாரிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ரபிஸி ரம்லி பொருளாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
கெஅடிலான் தேர்தலின் போது கட்சியின் துணைத் தலைவர் பதவியை தற்காத்துக் கொள்ள தவறினால், அமைச்சர் பதவியிலிருந்து விலகி சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக செயல்படுவேன் என ரபிஸி அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் கட்சியின் உயர்மட்டத் தலைமையில் இல்லாத ஒருவர் அமைச்சரவைப் பதவியை வகிப்பது பொருத்தமற்றது.
ஆகவே எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.
தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் சமர்ப்பித்து விட்டேன்.
எனது ராஜினாமா வரும் ஜூன் 17ஆம் தேதி அமலுக்கு வரும். இன்று முதல், ஜூன் 16 மீதமுள்ள வருடாந்திர விடுப்பில் இருப்பேன் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துல்ளார்.
முன்னதாக கெஅடிலான் தொகுதி அளவிலான தேர்தலில் ரபிசிக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படும் பல நபர்கள் போட்டியில் தோல்வியடைந்த பிறகு,
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் அமைச்சரவையில் இருந்து அவர் ராஜினாமா செய்யப் போவதாக ஊகங்கள் பரவத் தொடங்கின.
தற்போது அந்த ஊகங்கள் உண்மையாகி அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 5:04 pm
அன்னையர்களின் தியாகங்களுக்கு உரிய அங்கீகாரத்தை செய்வோம்: பிரபாகரன்
June 2, 2025, 1:17 pm