
செய்திகள் மலேசியா
துன் டையிமின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்காக மேலும் விசாரணை அறிக்கைகள் திறக்கப்படும்: அசாம் பாக்கி
பெட்டாலிங் ஜெயா:
மறைந்த துன் டையிம் ஜைனுடின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்புடைய அறிவிக்கப்படாத அதிக மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்வதற்காக மேலும் விசாரணை அறிக்கைகள் திறக்கப்படும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அசாம் பாக்கி கூறினார்.
சட்டவிரோதமாக பெறப்பட்டதாக நம்பப்படும் சொத்துக்களின் உரிமையை தீர்மானிக்க ஆணையம் செயல்பட்டு வருவதாகஅசாம் பாக்கி தெரிவித்தார்.
இதுவரை கண்டறியப்பட்ட சொத்துக்களின் மொத்த மதிப்பு RM2 பில்லியன் ஆகும்.
அவை தனித்தனியாக பறிமுதல் செய்யப்பட வேண்டிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட ஒவ்வொரு சொத்துக்கும் விசாரணை அறிக்கைக்கான விண்ணப்பம் தேவை.
இதுவரை, எட்டு ஆவணங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.
ஆனால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அவர் இன்று கூறினார்.
கடந்த வியாழக்கிழமை, வெளிநாடுகளில் இருந்து புதிய தகவல்களைப் பெற்ற பிறகு, கூடுதல் ஆவணங்களைத் திறந்ததாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கூறியது.
2023 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து இந்த கண்டுபிடிப்புகள் வந்ததாகவும், சொத்துக்களை அறிவிக்கத் தவறியது சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகும் என்றும் அசாம் கூறினார்.
இறுதி முடிவு அரசு துணை வழக்கறிஞரைச் சார்ந்தது என்றும் விசாரணை ஆவணங்களை நிறைவு செய்ய விசாரணை அதிகாரிகளுக்கு இரண்டு மாதங்கள் அவகாசம் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 5:04 pm
அன்னையர்களின் தியாகங்களுக்கு உரிய அங்கீகாரத்தை செய்வோம்: பிரபாகரன்
June 2, 2025, 1:17 pm