
செய்திகள் மலேசியா
"இறையாண்மை" என்ற கருத்தை மறுவரையறை செய்ய அரசாங்கம் முயற்சி செய்கிறது: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
வளர்ந்து வரும் இலக்கவியல் தொழில்நுட்பங்களின் தாக்கத்தைச் சமாளிக்க, "இறையாண்மை" என்ற கருத்தை மறுவரையறை செய்ய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் அடிப்படையிலான தொழில்நுட்பங்களின் எழுச்சிக்கு மத்தியில் இறையாண்மை பற்றிய அடிப்படை புரிதல் தற்போது குறைவாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், இது தேசிய நலன்கள் பாதிக்கக் கூடும் என்றும் அன்வார் கூறினார்.
இறையாண்மை பற்றிய கருத்து மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்.
அதோடு, அதனை நாட்டின் பாதுகாப்பைப் பாதுகாக்க மீண்டும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் தேசிய சட்டங்களிலிருந்து முற்றிலும் சுயாதீனமாக நிறுவனங்கள் மற்றும் செயல்பாடுகளை இடமளிக்க அனுமதிக்க வேண்டும் என்றார் அவர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 5:04 pm
அன்னையர்களின் தியாகங்களுக்கு உரிய அங்கீகாரத்தை செய்வோம்: பிரபாகரன்
June 2, 2025, 1:17 pm