
செய்திகள் மலேசியா
மலேசியாவில் மீண்டும் கோவிட்-19 பரவலா? பொது மக்கள் விழிப்புடன் இருக்க சுகாதத் துறை அறிவுறுத்தல்
கோலாலம்பூர்:
கோவிட்-19 கிருமித் தொற்று குறித்து பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக, பள்ளி விடுமுறை காலத்தில் கிருமிப் பரவல் அபாயம் அதிகம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பலர் ஒன்றுகூடும் இடங்களில் கொவிட்-19 கிருமி பரவல் அதிகரிக்கக்கூடும் என்று கிருமியியல் நிபுணர் குமிதா தேவதாஸ் கூறினார்.
தற்போது சிங்கப்பூர் உட்பட மலேசியாவின் அண்டை நாடுகளில் ஜே.என்.1 கிருமி வகையுடன் தொடர்புடைய கிருமிகளால் நோய்ப் பரவல் அதிகரித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல், சிறுவர்கள் மற்றும் முதியோர் முகக்கவசம் அணிந்துகொள்வது நல்லது என்றார் அவர்.
இந்நிலையில் பொது மக்கள் மெத்தனத்தமாக இருந்துவிடக்கூடாது என்று பினாங்கு மருத்துவமனையின் தொற்றுநோய் பிரிவுத் தலைவர் சாவ் டிங் சூ தெரிவித்தார்.
மலேசியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை அபாயகட்டத்தை எட்டவில்லை என்று பினாங்கு சுகாதாரத் துறை இயக்குநர் ஃபஸிலா ஷேக் அலாவுதீன் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 5:04 pm
அன்னையர்களின் தியாகங்களுக்கு உரிய அங்கீகாரத்தை செய்வோம்: பிரபாகரன்
June 2, 2025, 1:17 pm