
செய்திகள் மலேசியா
புத்ரா ஹைட்ஸ் வெடி விபத்து சம்பவம்: போலீஸ், ஜே.கேகேபி அறிக்கைகள் ஜூன் மாத இறுதியில் வெளியாகும்
சிப்பாங்:
புத்ரா ஹைட்ஸ் வெடி விபத்து சம்பவம் குறித்து போலீஸ் புகார், தொழிலாளர் பாதுகாப்பு, சுகாதார அறிக்கைகள் யாவும் அடுத்த மாதம் ஜூன் மாத இறுதியில் வெளியிடப்படும் என்று சிலாங்கூர் மாநில காவல்துறை தலைவர் ஹுசைன் ஒமார் கான் கூறினார்.
அலட்சியம், நாச வேலை காரணமாக இந்த வெடி விபத்து நடந்திருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நிறைவு பெற்ற நிலையில் JKKP இன் அறிக்கைக்காக போலீஸ் காத்திருக்கிறது என்று அவர் சொன்னார்.
விசாரணைக்கு உதவ பெட்ரோனாஸ் நிறுவனமும் பொதுப்பணி துறையும் மாதிரிகளை விசாரணைக்கு உட்படுத்தினர்.
அனைத்து எண்ணெய் மாதிரிகளும் தற்போது பகுப்பாய்வு செய்து விட்டதாகவும் ஹுசைன் ஒமார் சொன்னார்.
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காலை 8.10 மணிக்கு புத்ரா ஹைட்ஸ் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதி அருகே எரிவாயு குழாய் வெடி விபத்து ஏற்பட்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 5:04 pm
அன்னையர்களின் தியாகங்களுக்கு உரிய அங்கீகாரத்தை செய்வோம்: பிரபாகரன்
June 2, 2025, 1:17 pm