
செய்திகள் மலேசியா
இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேசன் இட வாய்ப்புகள் குறித்து கல்வியமைச்சு விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
நீலாய்:
இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேசன் இட வாய்ப்புகள் குறித்து கல்வியமைச்சு விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும்.
சிரம்பான் தொகுதி பெர்சத்து தலைவர் டத்தோ வி. சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.
கடந்த காலங்களில் இந்திய மாணவர்களுக்கு 1500 மெட்ரிகுலேசன் இடங்கள் ஒதுக்கப்பட்டது. அதன் பின் கூடுதலாக 700 இடங்கள் ஒதுக்கப்பட்டது.
ஆனால் 2,200 இடங்களில் மொத்தமாக தற்போது எத்தனை இந்திய மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பது தான் கேள்விக் குறியாக உள்ளது.
குறிப்பாக தகுதியான மாணவர்களுக்கு கூட மெட்ரிகுலேசன் வாய்ப்புகள் கிடைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக எழுந்துள்ளது.
ஆக இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் கல்வியமைச்சு ஒரு விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும்.
அதில் எத்தனை மாணவர்கள் மெட்ரிகுலேசனுக்கு விண்ணப்பம் செய்கின்றனர். எத்தனை மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது உட்பட அனைத்து விவரங்களும் அதில் இருக்க வேண்டும்.
இதன் மூலம் மெட்ரிகுலேசன் சர்ச்சைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 5:04 pm
அன்னையர்களின் தியாகங்களுக்கு உரிய அங்கீகாரத்தை செய்வோம்: பிரபாகரன்
June 2, 2025, 1:17 pm