
செய்திகள் மலேசியா
ரோஸ்மாவின் அவதூறு வழக்கு மீதான தீர்ப்பை ஜூலை 8 ஆம் தேதி நீதிமன்றம் அறிவிக்கும்
கோலாலம்பூர்:
டிக்டாக் பயனருக்கு எதிராக ரோஸ்மா மன்சோர் தொடர்ந்த அவதூறு வழக்கில், இழப்பீடு மதிப்பீடு குறித்த முடிவை ஜூலை 8 ஆம் தேதி வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹில்மி ஃபைட்டர் என்ற டிக்டோக் கணக்கின் உரிமையாளரான முகமது ஹில்மி கு தின் பதிவேற்றிய வீடியோவிலிருந்து இந்த வழக்கு எழுந்துள்ளது.
இந்த வீடியோவில் தவறான, அவதூறான அறிக்கைகள் இருப்பதாக ரோஸ்மா கூறுகிறார்.
கடந்த 2023 மார்ச் 22 அன்று வெளியிடப்பட்ட இந்த காணொளி, ரோஸ்மாவை பாவச் செயல்களைச் செய்பவர்களாகவும், சூனியம் செய்பவர்களாகவும், பலதெய்வ வழிபாடு செய்பவர்களாகவும் சித்தரிப்பதாகக் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து தனது நற்பெயருக்கு அந்த வீடியோ களங்கம் விளைவித்ததாகக் கூறி ரோஸ்மா வழக்குத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 5:04 pm
அன்னையர்களின் தியாகங்களுக்கு உரிய அங்கீகாரத்தை செய்வோம்: பிரபாகரன்
June 2, 2025, 1:17 pm