
செய்திகள் மலேசியா
நம்பிக்கை கூட்டணியுடன் அரசியல் ஒத்துழைப்பு நடத்த ஜி.ஆர்.எஸ் தயாராக உள்ளது: ஹஜிஜி நோர் தகவல்
கோலாலம்பூர்:
சபா மாநில சட்டமன்ற தேர்தலில் ஆளும் ஜி.ஆர்.எஸ். கூட்டணி நம்பிக்கை கூட்டணியுடன் அரசியல் ஒத்துழைப்பை தற்காத்து கொள்ள தயாராக உள்ளது என்று ஜி.ஆர்.எஸ் தலைவர் டத்தோஶ்ரீ ஹஜிஜி நோர் சொன்னார்.
சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியின் நிலைப்பாட்டினை தாம் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் தெரிவித்து விட்டதாக அவர் கூறினார்.
இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. GRS-PH கூட்டணி சபா மாநில தேர்தலில் தற்காத்து கொள்ள விரும்புகிறது.
இருப்பினும், சில கட்சிகள் தங்கள் கூட்டணியுடன் அரசியல் ஒத்துழைப்பு மேற்கொள்ள அழைத்துள்ளதாக ஹஜிஜி நோர் சொன்னார்.
தேசிய முன்னணி- நம்பிக்கை கூட்டணி அரசியல் கூட்டணியில் SABAH GRS கட்சியும் இணைய வேண்டும் என்று பிரதமர் அன்வார் தனது எதிர்பார்ப்பினை முன்வைத்திருந்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 5:04 pm
அன்னையர்களின் தியாகங்களுக்கு உரிய அங்கீகாரத்தை செய்வோம்: பிரபாகரன்
June 2, 2025, 1:17 pm