நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதிய தேசிய ஒப்பந்தம் இந்திய சமூகத்தை எழுச்சி பெற செய்யும் புதிய வாய்ப்பு: புனிதன் பரமசிவன்

கோலாலம்பூர்:

மலேசிய இந்தியச் சமூகத்தின் எழுச்சி, புதிய தேசிய ஒப்பந்தத்தின் வாயிலாக ஏற்படக்கூடியது என மலேசிய இந்திய மக்கள் கட்சி (MIPP) தலைவர் புனிதன் பரமசிவன் தெரிவித்தார்.

டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் சிங்கப்பூரில் உள்ள ISEAS – யூசுப் இஷாக் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் அளித்த முக்கிய உரையில், “புதிய தேசிய ஒப்பந்தம்” என்ற கொள்கை முன்மொழியப்பட்டது.

இது நீதிமுறையும், சமத்துவ நியாயமும் அடிப்படையாக கொண்ட முழுமையான அரசியல் மாற்றத்தை நோக்குகிறது.

“இந்த ஒப்பந்தம் பழிவாங்கும் அரசியலை மறுக்கிறது. ஒருமைப்பாட்டையும், கருணை நிரம்பிய நிர்வாகத்தையும் முன்னிறுத்துகிறது. அரசியல் என்பது மக்களுக்காக இருக்கவேண்டும் என்ற தலைமைத்துவத் தத்துவத்தை டத்தோஸ்ரீ ஹம்சா வலியுறுத்தினார் எனப் புனிதன் தெரிவித்தார்.

MIPP தரப்பில், இந்த ஆலோசனை இந்திய சமூகத்தின் நீண்டகால பிரச்சனைகள் குறிப்பாகக், கல்வி, வேலைவாய்ப்பு, நகர்ப்புற வறுமை, சுகாதாரம், அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவற்றை முற்றிலும் தீர்க்கக்கூடிய வாய்ப்பாக பார்க்கப்படுவதாக புனிதன் குறிப்பிட்டார்.

நாம் உரிமைகளை அறிவோம். ஆனால் இன்று, நம்பிக்கையின் அடிப்படையில் புதிய செயல்பாடுகள் தேவை. அதற்கான திசைதான் புதிய தேசிய ஒப்பந்தம் எனவும் அவர் கூறினார்.

MIPP, 4E என்ற வழிக்காட்டுதலின் கீழ் (Education, Employment, Economic, Empowerment) நவீன திட்டங்களை இயக்கத் தயாராக இருப்பதாகவும், MITRA போன்ற முக்கிய அமைப்புகளுக்கு புது வாழ்வு அளிக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

“ஒரு சிறந்த மலேசியா என்பது கனவு அல்ல, கடமை,” என ஹம்சாவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டிய புனிதன், “இந்திய சமூகமே அந்தக் கடமையை ஏற்று முன்னேற வேண்டும்,” என்றார் அவர். 

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset