நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் பிறப்பு விகிதம் சரிவு: அச்சத்தில் தம்பதிகள்

பினாங்கு:

குழந்தையின்மை பிரச்சனையைக் களையும் நோக்கில் மலேசிய கருவூல மற்றும் குடும்ப மேம்பாட்டு சங்கம் கருத்தரிப்பு முகாமை ஏற்பாடு செய்தது. 

இந்தக் கருத்தரிப்பு விழிப்புணர்வு முகாம் மலேசிய கருவூல மற்றும் குடும்ப மேம்பாட்டு சங்கத்தின் தலைவி, முனைவர் சத்தியவதி தலைமையில் மே 24 முதல் 25 ஆம் தேதி வரை ராம் கருத்தரிப்பு மற்றும் மகளிர் நிபுணர் மருத்துவமனையில் நடைபெற்றது. 

குழந்தையில்லாத 50-க்கும் மேற்பட்ட திருமணமான தம்பதிகள் இந்த முகாமில் கலந்து கொண்டனர். 

அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளும் பரிசோதனைகள் குறித்த முறைகளும் தெரிவிக்கப்பட்டன என முனைவர் சத்தியவதி குறிப்பிட்டார். 

மருத்துவர் உடையார் பாண்டியன் ராமசந்திரன், மருத்துவர் அருனா அஷோக் ஆகியோர் தம்பதிகளுக்கு நேரடி ஆலோசனைகளை வழங்கினர்

இதனிடையே, நாட்டின் இவ்வாண்டு முதல் காலாண்டில் பிறப்பு விகிதம் 11.5% விழுக்காடு குறைந்துள்ளதாக புள்ளியல் துறை கூறியது.

இதனையும் கருத்தில் கொண்டு இந்தக் கருத்தரிப்பு விழிப்புணர்வு முகாம் முன்னெடுக்கப்பட்டதாக முனைவர் சத்தியவதி கூறினார். 

கருத்தரிப்பு குறைபாடுகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பிறப்பு விகிதத்தை உயர்த்தலாம் என்றார் அவர். 

எதிர்க்காலத்தில் நாடு முழுவதும் இதுபோன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று முனைவர் சத்தியவதி நம்பிக்கை தெரிவித்தார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset