
செய்திகள் மலேசியா
ஓய்வு பெறும் வயது 65 ஆக உயர்த்தப்பட்டால், பணியை தொடரலாமா வேண்டாமா என்பது தொழிலாளர்களின் தேர்வாக இருக்க வேண்டும்: சோலமன்
கோலால்லம்பூர்:
ஓய்வு பெறும் வயது 65 ஆக உயர்த்தப்பட்டால், பணியை தொடரலாமா வேண்டாமா என்பது தொழிலாளர்களின் தேர்வாக இருக்க வேண்டும்.
தேசிய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜே. சோலமன் இதனை கூறினார்.
ஓய்வு பெறும் வயதை 65 வயதாக உயர்த்தும் திட்டத்தை இந்த நாட்டில் ஒரு நெகிழ்வான அணுகுமுறையுடன் செயல்படுத்தலாம்.
அதனால் இது தொழிலாளர்களின் விருப்பம் அல்லது திறனுக்கு ஏற்ப இருக்க வேண்டும்.
இதன் பொருள் தொழிலாளர்கள் 60 வயதில் ஓய்வு பெறுவதா அல்லது 65 வயது வரை தொடர்ந்து பணியாற்றுவதா என்பதைத் தேர்வுசெய்யும் உரிமையை வழங்க வேண்டும் என்பதாகும்.
தனிநபரின் தற்போதைய சூழ்நிலைகள், உடல்நலக் கவலைகள், தனிப்பட்ட நிதித் தயார்நிலை ஆகியவற்றைப் பூர்த்தி செய்ய நெகிழ்வுத்தன்மை வழங்கப்பட வேண்டும்.
பிரதமர் துறையின் சட்டம், நிறுவன சீர்திருத்த அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஒத்மான் மலேசியாவின் ஓய்வூதிய வயதை 65 ஆக உயர்த்துவதற்கான பரிந்துரையை முன்வைத்தார்.
இது குறித்து பேசிய சோலமன் மேற்கண்டவாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 5:04 pm
அன்னையர்களின் தியாகங்களுக்கு உரிய அங்கீகாரத்தை செய்வோம்: பிரபாகரன்
June 2, 2025, 1:17 pm