
செய்திகள் மலேசியா
பெருமையின் சிகரம் சிவமலர் கணபதி
பெண்கள் சக்தி, சமூக அர்ப்பணிப்பு, அரசியல் விழிப்புணர்வு – இவை அனைத்தையும் ஒரே உருவில் கொண்டாட வைத்திருக்கிறார் சிவமலர் கணபதி.
பிகேஆர் கட்சியின் மத்திய செயற்குழு (MPP) பதவிக்கான அணமைய கட்சித் தேர்தலில், சிவமலர் கணபதி வெற்றி பெற்று, இந்த முக்கியமான குழுவில் வெற்றி பெற்ற ஒரே இந்திய பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இது மலேசிய அரசியலில் இந்தியப் பெண்கள் அரசியல் முன்னேற்றத்தின் ஒரு புதிய வரலாற்றுப் பதிவாகும்.
தோல்வியினால் திரும்பிச் செல்லாத மனம்
கடந்த மாதம் நடந்த புக்கிட் பிந்தாங் தொகுதிக்கான பிகேஆர் தலைவர் தேர்தலில், நான்கு முனைப் போட்டியின் காரணமாக வெற்றியைத் தவறவிட்டிருந்த சிவமலர், அதே நேரத்தில் பின்னடைவை ஒரு ஊக்கத்தாக்கமாக மாற்றினார். அந்தத் தோல்வி, அவரை ஆளுமைமிக்க பொறுப்புக்கேற்றவராக மக்கள் முன் வெளிக்கொணர்ந்தது.
மத்திய செயற்குழுவில் உறுதியான ஓர் இந்திய குரல்
பிகேஆர் கட்சியின் உயர்மட்டமான 20 மத்திய செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்சி உறுப்பினர்கள் போட்டியிட்டனர். அதில் சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ், பினாங்கு பத்து ஊபான் சட்டமன்ற உறுப்பினர் A. குமரேசன் ஆகியோருடன் சேர்ந்து சிவமலர் கணபதிவும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
20 ஆண்டுகள் மக்கள் சேவையில் – போராட்டங்களில் உறைந்த நம்பிக்கை முகம்
சிவமலர் கடந்த இரண்டு தசாப்தங்களாக மக்களுக்காக வேலை செய்துவந்தவர். வீதிப் போராட்டங்களிலிருந்தும், சமூக நீதி அடிப்படையிலான செயல்பாடுகளிலும் தொடர்ந்து முன்னணியில் பங்கெடுத்தவர். இவர் வெற்றிபெற்றது, அரசியல் பரப்பிலும், சமூக சேவையிலும் தொடர்ந்து நிலைத்து நிற்கும் பெண்கள் சாதனையின் ஒரு புதிய அத்தியாயமாக அமைந்துள்ளது.
சமுதாயத்தை சுயமாக மாற்றும் செயலில் ஈடுபட்டவர்களுக்கு மக்கள் தரும் பதிலாகவே இந்த வெற்றி பார்க்கப்படுகிறது. பிகேஆர் போன்ற பெரும்பான்மைக் கட்சியில் ஒரு இந்தியப் பெண் வாக்குகளின் அடிப்படையில் முக்கியத்துவம் பெறுவது, அரசியல் திருப்புமுனையாகவே பார்க்கப்படுகிறது.
சாதனைகளைப் பின்தொடரும் பெண்களின் முன்னணி முகமாக இன்று நிற்கிறார் சிவமலர் கணபதி. மலேசிய அரசியலில் பெண்களின் பங்கு மேம்பட வேண்டும் என்பதற்கான ஒளிவிழிப்பாகவும், இந்தியர் சமூகத்தின் அரசியல் முன்னேற்றத்தில் ஒரு பெண் குரலும் இருக்கிறது என்பதை வலியுறுத்தும் வரலாற்று நிகழ்வாகவும் இந்த வெற்றி அமைகிறது.
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 5:04 pm
அன்னையர்களின் தியாகங்களுக்கு உரிய அங்கீகாரத்தை செய்வோம்: பிரபாகரன்
June 2, 2025, 1:17 pm