
செய்திகள் மலேசியா
சபா தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து தேசிய முன்னணி விவாதிக்கும்: ஜம்ரி
கோலாலம்பூர்:
சபா தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து தேசிய முன்னணி விவாதிக்கும்.
தேசிய முன்னணியின் தலைமை செயலாளர் டத்தோஶ்ரீ ஜம்ரி அப்துல் காதிர் இதனை கூறினார்.
சபா மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள எந்தவொரு கட்சியுடனும் அரசியல் ஒத்துழைப்பைப் பற்றி விவாதிக்க தேசிய முன்னணி தயாராக உள்ளது.
தேசிய முன்னணி தொடர்ச்சியாக விவாதங்களை நடத்தி வருகிறது. எங்கள் விவாத செயல்முறை ஏற்கனவே தொடங்கிவிட்டது.
அதற்கான செயல்முறைகளும் தொடரும் ன்று அவர் 2025 மடானி இளம் தலைவர்களுக்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி சபாவிலிருந்து கட்சி கூறுகளைக் கொண்டுள்ளது.
எனவே கூட்டணியின் ஸ்திரத்தன்மை, வலிமையை உறுதி செய்வதற்கு ஒரு விரிவான அணுகுமுறை தேவை என்பதையும் தேசிய முன்னணி கணக்கில் எடுத்துக்கொண்டதாக ஜம்ரி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 5:04 pm
அன்னையர்களின் தியாகங்களுக்கு உரிய அங்கீகாரத்தை செய்வோம்: பிரபாகரன்
June 2, 2025, 1:17 pm