
செய்திகள் மலேசியா
ரோ 95 பெட்ரோல் மானியத்தை பகுத்தறிவுப்படுத்தும் திட்டம்; இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் செயல்படுத்தப்படும்: அமீர் ஹம்சா
புத்ராஜெயா:
ரோ 95 பெட்ரோல் மானியத்தை பகுத்தறிவுப்படுத்தும் திட்டம் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் செயல்படுத்தப்படும்.
இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் இதனை தெரிவித்தார்.
மக்களுக்கு விரிவான, நியாயமான முறையில் மானியங்களை வழங்குவதற்கான சிறந்த வழிமுறையை ஆராய்வதற்காக, மானியங்களை பகுத்தறிவு செய்வது தொடர்பான விவாதங்கள் அமைச்சரவை மட்டத்தில் இன்னும் நடந்து வருகிறது.
மானியங்களைப் பெறுவதற்கான தகுதி அளவை எங்கு அதிகரிப்பது என்பது குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமைச்சரவை விவாதித்துள்ளன.
பிரதமரால் அறிவித்தது போல் அரசாங்கம் இத்திட்டத்திற்கு அடையாள அட்டையைப் பயன்படுத்தும்.
காரணம் ஒவ்வொரு மலேசியருக்கும் அமையாள அட்டை இருக்கும். இதுவே அது சிறந்த வழிமுறையாக இருக்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 5:04 pm
அன்னையர்களின் தியாகங்களுக்கு உரிய அங்கீகாரத்தை செய்வோம்: பிரபாகரன்
June 2, 2025, 1:17 pm