
செய்திகள் மலேசியா
அழுத்தமான எதிர்ப்புகளையும், மாயமான விமர்சனங்களையும் பொருட்படுத்தாது, மக்களின் நம்பிக்கையால் வென்றவர்
மலேசிய அரசியலில், குறிப்பாக பிகேஆர் கட்சியின் நிலைப்பாடுகளுக்குள், கடந்த காலங்களாகவே இந்தியர் சமூகத்தின் வலிமையானப் பிரதிநிதித்துவம் குறைவாகவே காணப்பட்டிருக்கிறது.
ஆனால் இந்த அண்மைய பிகேஆர் கட்சித் தேர்தலில், உதவித் தலைவர் பதவிக்காக நடைபெற்ற போட்டியில் டத்தோஸ்ரீ ரமணன் பெற்ற மிகப்பெரிய வெற்றி, இந்த சிக்கலான மரபை முற்றிலும் மாற்றும் புதிய திசையைத் தந்திருக்கிறது.
5895 வாக்குகள் – ஒரு அரசியல் அறிக்கையாகும்
தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை துணை அமைச்சர் மட்டுமின்றி, கடந்த காலங்களில் மித்ரா அமைப்பின் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றிய டத்தோஸ்ரீ ரமணன், இந்த தேர்தலில் இரண்டாவது இடத்தை (5895 வாக்குகள்) கைப்பற்றி, சமூகத்தின் முழுமையான ஆதரவை பெற்றிருப்பது முக்கியமானது.
சிறுபான்மை சமூகத்தில் இருந்து வந்தவர் என்றாலும், இந்தியர்கள் மட்டுமின்றி மலாய் மற்றும் சீன சமூகங்களின் வாக்குகளையும் தக்கவைத்திருக்கிறார் என்பது முக்கியமான அரசியல் நகர்வாகும்.
வன்மையான எதிர்ப்புகளையும் தகர்த்தெறிந்த நம்பிக்கை
சமூக ஊடகங்களில் குறிப்பிட்ட பதவிக்கான வன்மையான விமர்சனங்கள், மறைமுகச் சாடல்கள் என பல எதிர்ப்புகள் இருந்தபோதிலும், அவற்றை எதிர்த்துப் பேசாமல், தன்னம்பிக்கையுடன், மக்கள் மேலான தீர்ப்பு வழங்குவார்கள் என்ற துணிச்சலுடன் தன்னை நிலைநிறுத்தினார். இது அவருடைய அரசியல் ஞானத்தையும், தன்முனைப்பும், பணிவையும் உணர்த்துகிறது.
திறனுக்கு ஏற்ப பதவி வேண்டும்
இன்று மலேசிய அரசியலில், தகுதி வாய்ந்தவர்கள் பதவியில் அமர வேண்டும் என்ற மக்கள் எதிர்பார்ப்பு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், “தோல்வியடைந்தால் அமைச்சரவை விலகல்” என தெரிவித்த பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்பி, தன்னுடைய அரசியல் நம்பிக்கையை ஒரு பதவியோடு இணைத்திருக்கிறார்.
அதே நேரத்தில், வெற்றிபெற்று தன்னை நிரூபித்த டத்தோஸ்ரீ ரமணன், தொடர்ந்து முழு அமைச்சர் பதவிக்கு தகுதியானவர் என்பதை மக்களின் மனதில் உறுதி செய்துள்ளார். மித்ரா காலத்திலேயே சமூக நிதிகளை முறையாக நிர்வகித்தவர். தற்போது, தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறையில் தம் அடையாளத்தை பதித்தவர். இது, அவரது நிர்வாகத் திறமைக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது.
தமிழ் பேசும் அமைச்சருக்கான நிகராளி
இந்தியர் சமூகத்தின் வர்த்தக, கல்வி, தொழில் முனைவோர் தளங்களில் பெரிதும் செயல்பட்டு வரும் இன்றைய சூழலில், அரசியலிலும் அவர்களுக்கு முக்கியமான வரிசை வழங்கப்பட வேண்டியது நேர்மையான சமூக நீதியாய் அமைந்திருக்கிறது.
இந்நிலையில், டத்தோஸ்ரீ ரமணனின் முன்னேற்றம் ஒரு சமூக அடையாள அரசியலாக மட்டுமல்லாமல், மலேசிய அரசியலின் பன்முகத் தன்மை மற்றும் திறந்த சிந்தனைக்கு சான்றாக திகழ்கிறது.
அங்கீகாரமே அடித்தளம்
மக்களுக்கு பணியாற்றும் நேர்மையான தன்னலமில்லா நபருக்கு மட்டுமே மக்கள் முழு ஆதரவை அளிப்பார்கள் என்பதற்கு டத்தோஸ்ரீ ரமணன் ஒரு நேரடி எடுத்துக்காட்டு.
அவர் தற்போது ஒரு துணை அமைச்சராக இருந்தாலும், அவர் நிரூபித்த திறன், தன்னெழுச்சி மற்றும் மக்கள் மேலான நம்பிக்கை அவரை மலேசிய அரசியலில் ஒரு முழு அமைச்சராக அமைத்துவைக்க வேண்டும் என்பதே பெரும்பான்மையான மலேசியர்களின் எதிர்பார்ப்பு.
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 5:04 pm
அன்னையர்களின் தியாகங்களுக்கு உரிய அங்கீகாரத்தை செய்வோம்: பிரபாகரன்
June 2, 2025, 1:17 pm