நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாளை பிறை தென்பட்டால் துல்ஹஜ் முதல் நாள் புதன்கிழமை ஆகும்; தியாகத் திருநாள் ஜூன் 6 ஆம் தேதி கொண்டாடப்படும்: அஹ்மத் இர்பான்

கோலாலம்பூர்:

நாளை பிறை தென்பட்டால் துல்ஹஜ் முதல் நாள் புதன்கிழமை ஆகும். மேலும் தியாகத் திருநாள் ஜூன் 6 ஆம் தேதி கொண்டாடப்படும்.

அல்-சுல்தான் அப்துல்லா பகாங் மலேசியா பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்   டாக்டர் அஹ்மத் இர்பான் இக்மல் ஹிஷாம் இதனை கூறினார்.

தியாகத் திருநாள் கொண்டாட்டத்திற்கான தேதி நிர்ணயம் இருப்பிடத்தின் அடிப்படையில் மாறுபடும்.

மேற்கில் அமைந்துள்ள நாடுகளில் பிறை காணும் வாய்ப்பு பொதுவாக மலேசியா உட்பட கிழக்கை விட மாறுபட்டதாகும்.

இதன் அடிப்படையில் தியாகத் திருநாள் தேதி  நிர்ணயம் மத்லக் அடிப்படையில் செய்யப்படுகிறது.

மத்லக் என்பது சூரியன் அல்லது சந்திரன் தோராயமாக ஒரே நேரத்தில் உதித்து மறையும் நேரத்தைக் கொண்ட அல்லது ஒரே பகல், இரவைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளை உள்ளடக்கிய ஒரு பகுதியைக் குறிக்கிறது.

எனவே, ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியை தளமாகக் கொண்ட சர்வதேச வானியல் மையத்தின் அறிக்கை,

பெரும்பாலான நாடுகளில் ஜூன் 6ஆம் தேதி தியாகத் திருநாள்  கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

அனைத்துலக வானியல் மையத்தால் வெளியிடப்பட்ட கணக்கீட்டுத் தரவு அவற்றின் இருப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டது.

இந்த அறிக்கை அவற்றின் வட்டாரத்தில் உள்ள நாடுகளுக்கு  மட்டுமே பொருத்தமானது.

இஸ்லாமிய நாட்காட்டி முறையில், கிழக்கு நாடுகளைவிட மேற்கத்திய நாடுகளில் பிறை முன்னதாகவே பார்ப்பது வழக்கம் என்று அவர்  கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset