நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநிலத்தில் 2027ஆம் ஆண்டு வரை மாநில தேர்தல் இல்லை: ஜொகூர் மந்திரி பெசார் ஓன் ஹாஃபிஸ் காசி தகவல் 

ஜொகூர் பாரு: 

ஜொகூர் மாநிலத்தில் 2027ஆம் ஆண்டு வரை மாநில தேர்தல் நடத்தும் எண்ணம் இல்லை என்று ஜொகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காசி கூறினார். 

ஜொகூர் மாநிலத்தைப் பொறுத்தவரையில் இது தேர்தல் காலம் அல்ல. 

நடப்பு மாநில அரசாங்கத்தின் தவணைக்காலம் ஏப்ரல் 2027ஆம் ஆண்டு நிறைவடைகிறது. 

ஜொகூர் மாநில இடைக்கால ஆட்சியாளர், துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் இணக்கம் தெரிவித்தால் சட்டமன்றம் கலைக்கப்படும் என்று ஓன் ஹாஃபிஸ் திட்டவட்டமாக தெரிவித்தார். 

கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி மூன்றில் இரண்டு பெரும்பாண்மை பெற்று மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. 

இந்த தேர்தலில் தேசிய முன்னணி 56 சட்டமன்ற இடங்களில் 40 சட்டமன்ற இடங்களை வென்ற நிலையில் நம்பிக்கை கூட்டணி 12 சட்டமன்ற இடங்களை வெற்றிக்கொண்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset