
செய்திகள் மலேசியா
மாணவியை அவமானப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் விவகாரத்தை கல்வியமைச்சு விசாரிக்கிறது: ஃபட்லினா
புத்ராஜெயா:
மாணவியை அவமானப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் விவகாரத்தை கல்வியமைச்சு விசாரிக்கிறது.
கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் இதனை கூறினார்.
ஒரு ஆசிரியர் நண்பர்கள் முன்னிலையில் ஒரு தொடக்கப் பள்ளி மாணவியை அவமானப்படுத்தியுள்ளார்.
இதனால் அந்தக் மாணவிக்கு மன ரீதியான பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படும் சம்பவம் தற்போது கல்வியமைச்சின் விசாரணையில் உள்ளது.
இந்த விஷயம் மிகவும் வருந்தத்தக்கது. குறிப்பாக இந்த பதிவும் பரப்பப்பட்டு சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால்.
இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்துவதற்கு கல்வியமைச்சு முழுப் பொறுப்பையும் ஏற்கும்.
எந்தப் பிரச்சினைகள் எழுந்தாலும், அரசு ஊழியர்களாக நேர்மை மற்றும் நெறிமுறைகள் குறித்து ஆசிரியர்கள் அவ்வப்போது நினைவூட்டப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 5:04 pm
அன்னையர்களின் தியாகங்களுக்கு உரிய அங்கீகாரத்தை செய்வோம்: பிரபாகரன்
June 2, 2025, 1:17 pm