நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரபிசியின் ஆதரவாளர்கள் கட்சியை விட்டு வெளியேற மாட்டார்கள்: அமினுடின்

நீலாய்:

ரபிசி ரம்லியின் ஆதரவாளர்கள் கெஅடிலான் கட்சியை விட்டு வெளியேற மாட்டார்கள்.

நெகிரி மந்திரி புசாரும் கட்சியின் உதவித் தலைவருமான டத்தோஶ்ரீ அமினுடின் ஹருண் இதனை கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சித் தேர்தலில் பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி தோல்வியடைந்ததார்.

இதனை தொடர்ந்து  அவரின் ஆதரவாளர்கள் கட்சியை விட்டு வெளியேறுவது உட்பட அவசரமாகச் செயல்பட மாட்டார்கள்.

போராட்டத்தைத் தொடர கட்சியுடன் மீண்டும் எழுந்து நிற்பதற்கு முன்பு அமைதியடைய சிறிது நேரம் மட்டுமே தேவை.

தங்கள் ஏமாற்றம் கட்சியின் ஸ்திரத்தன்மையைப் பாதிக்கும் அளவுக்கு நீண்ட காலம் நீடிக்காது என்றும், பிகேஆருக்குள் நிலைமை மேம்படும் என்றும் நம்பிக்கையுடன் உள்ளார்.

ரபிசியின் ஆதரவாளர்கள் கட்சியை விட்டு வெளியேற மாட்டார்கள்.

ஆனால் கிளை மற்றும் துணைக் கிளை மட்டங்களில் செயல்படுத்தக்கூடிய உத்திகளை ஒரு படி முன்னேறிச் செல்வதாகக் கருதுவார்கள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset