
செய்திகள் மலேசியா
சேவியர் ஜெயக்குமார் மீண்டும் கெஅடிலானில் இணையவில்லை: செயலாளார்
கோலாலம்பூர்:
கெஅடிலான் முன்னாள் துணைத் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் மீண்டும் கட்சியில் இணைந்ததாக வெளியான வதந்திகளை அக்கட்சியின் பொதுச் செயலாளர் புசியா சாலே மறுத்துள்ளார்.
வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை ஜொகூர்பாருவில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் அவர் கலந்து கொண்ட புகைப்படங்கள் பரவியதைத் தொடர்ந்து எழுந்த ஊகங்களுக்கு பதிலளிக்கும் விதமாக இல்லை என்று அவர் சுருக்கமாக பதிலளித்தார்.
சேவியர் மாநாட்டில் கலந்து கொள்ள சிறப்பு அனுமதிச் சீட்டுக்கு விண்ணப்பித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் சேவியரைத் தொடர்பு கொண்டபோது, அவர் மாநாட்டிற்கு விருந்தினராக அழைக்கப்பட்டதாகக் கூறினார்.
எனக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு வந்தது. மாநாட்டில் பிற விருந்தினர்களுடன் கலந்து கொண்டேன்.
கலந்துகொள்ள முடிந்திருப்பது நல்லது என்று அவர் கூறினார். மாநாட்டின் போது எந்த கூட்டங்களிலும் தான் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 5:04 pm
அன்னையர்களின் தியாகங்களுக்கு உரிய அங்கீகாரத்தை செய்வோம்: பிரபாகரன்
June 2, 2025, 1:17 pm