
செய்திகள் மலேசியா
ஆலய விவகாரங்கள் திடீரென சர்ச்சையாகிறது என்றால் அதற்கான பின்னணியை மக்கள் ஆராய வேண்டும்: டத்தோஶ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
நாட்டில் ஆலய விவகாரங்கள் திடீரென சர்ச்சையாகிறது என்றால் அதற்கான பின்னணியை மக்கள் ஆராய வேண்டும்.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
ஸ்தாப்பாக் ஶ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் 50ஆம் ஆண்டு பூச்சொரித் திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய டத்தோஶ்ரீ சரவணன்,
இந்த ஆலயம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்விடத்தில் உள்ளது.
குறிப்பாக இவ்வாலயத்தில் இந்து சமயத்தை வளர்க்கும் திட்டங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதனாலே இவ்வாலயம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
காரணம் தற்போது மக்கள் சமய விழிப்புணர்வு இல்லாததால் பல மோசடிகளில் சிக்கிக் கொள்கின்றனர்.
கண்ணில் மை, வாயில் பொய், கடைசியில் நெய் என்ற நிலையாகி விட்டது. ஆக மக்கள் இதுபோன்ற விவகாரங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும்.
மேலும் நாட்டில் தற்போது கோயில் ஹராம் என்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இவ்விவகாரம் திடீரென சர்ச்சையாகிறது என்றால் அதற்கான பின்னணியை மக்கள் ஆராய வேண்டும் என்று டத்தோஶ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 5:04 pm
அன்னையர்களின் தியாகங்களுக்கு உரிய அங்கீகாரத்தை செய்வோம்: பிரபாகரன்
June 2, 2025, 1:17 pm