
செய்திகள் உலகம்
உலகெங்கும் அழைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள 1300 பேருக்கு சவுதி மன்னரின் விருந்தாளிகளாக ஹஜ் மேற்கொள்ள மன்னர் சல்மான் அழைப்பு
ரியாத்:
இந்த ஆண்டு ஹஜ், உம்ரா புனித யாத்திரை மேற்கொள்ள 100 நாடுகளைச் சேர்ந்த 1,300 யாத்ரீகர்களுக்கு சவூதி அரேபியா மன்னர் சல்மான் அப்துல் அஜிஸ் சிறப்பு அழைப்பு விடுத்துள்ளார்.
ஹஜ், உம்ரா புனித யாத்திரைக்கான இரண்டு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் விருந்தினர் திட்டத்தின் கீழ் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியை இஸ்லாமிய விவகாரங்கள் தஃவா, வழிகாட்டுதல் அமைச்சு செயல்படுத்துகிறது.
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களிடையே ஆன்மீக, கலாச்சார பிணைப்புகளை வலுப்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாக இருப்பதாக சவூதி அரேபிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இஸ்லாமிய விவகார அமைச்சரும் திட்டத்தின் பொது மேற்பார்வையாளருமான ஷேக் டாக்டர் அப்துல் லத்தீஃப் அல் ஷேக், சிறப்பு விருந்தினர்களுக்கான இந்த தாராளமான உத்தரவுக்கு மன்னர் சல்மான், பிரதமர் முஹம்மது சல்மான் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 25, 2025, 1:12 pm
‘பாலஸ்தீனா்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி கொன்றுவரும் இஸ்ரேல் ராணுவம்’
May 25, 2025, 11:39 am
ஏர் ஆசியா விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி பரபரப்பை ஏற்படுத்திய ஆடவர்
May 24, 2025, 10:56 am
ஜெர்மனியில் கத்திக்குத்துக்கு இலக்கான 17 பேர்: படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
May 24, 2025, 10:50 am
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டினர் படிப்பதற்கான தடை உத்தரவை நீதிமன்றம் நிறுத்தியது
May 24, 2025, 10:43 am