
செய்திகள் உலகம்
மனைவியின் கள்ளக் காதலனைச் சுட்டுக்கொன்ற கணவன்: தாய்லாந்தில் பரபரப்பு
பேங்கொக்:
மனைவியின் கள்ளக் காதலனை அப்பெண்ணின் கணவர் சுட்டுக்கொன்றார். மனைவியுடன் கள்ள உறவு கொண்டிருந்ததால் இந்த செயலை கணவர் புரிந்ததாக சொல்லப்படுகிறது.
நேற்றிரவு 9 மணிக்கு நிகழ்ந்த இந்த சம்பவத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் அதில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் எண்ணெய் நிலையத்தில் பணிபுரியும் தொழிலாளர் ஒருவர் போலீஸ் புகார் அளித்தார்.
மரணமடைந்த நபர் 33 வயதான பலாதிப் என்று பெயருடையவர் என்று போலீஸ் அடையாளம் கண்டனர்.
கை, மார்பு பகுதிகளில் துப்பாக்கி சூடு தோட்டாக்கள் பாய்ந்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.
சந்தேக நபர் போலீசில் சரணடைந்தார். அதில் தனது மனைவியுடன் சம்பந்தப்பட்ட ஆடவர் கள்ள உறவு கொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
ஆடவரை சுட்ட கணவனுக்கு எதிராக செக்ஷன் 288 குற்றவியல் சட்டம் பதிவு செய்யப்பட்டது. இதனால் அவருக்கு எதிராக 15 முதல் 20 ஆண்டுகள் சிறை, அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 6:28 pm
இந்தியா பாகிஸ்தான் மீண்டும் சண்டையிட்டால் வர்த்தக ஒப்பந்தம் கிடையாது: டிரம்ப் எச்சரிக்கை
June 1, 2025, 5:10 pm
சாக்கடையிலிருந்து ஊர்ந்து வந்த பெண் – பேய் படம் போல் காட்சி, காணொலி வைரல்
June 1, 2025, 11:21 am
2025-ஆம் ஆண்டுக்கான உலக அழகியானார் தாய்லாந்தின் ஓபல் சுசாட்டா
June 1, 2025, 11:19 am
விமான நிலையத்தின் பெண்ணின் முக ஒப்பனையைக் கலைக்க சொன்ன அதிகாரிகள்
May 31, 2025, 4:58 pm
பாலியில் ஒரு லிட்டருக்கும் குறைவான தண்ணீர் பாட்டில்களுக்கு தடை
May 28, 2025, 3:40 pm