
செய்திகள் உலகம்
சாக்கடையிலிருந்து ஊர்ந்து வந்த பெண் – பேய் படம் போல் காட்சி, காணொலி வைரல்
மக்காத்தி:
பிலிப்பீன்ஸில் சாலையோரத்தில் இருந்த சாக்கடையிலிருந்து ஊர்ந்து வந்த பெண்ணின் காணொலி வைரலானது.
வெளியே வந்தது பெண்ணா இல்லை பேயா?" என்று இணையத்தில் பகிரப்பட்ட காணொளியைக் கண்ட பலர் அஞ்சினர்.
மக்காத்தி நகரில் தகவல் அறிந்த அதிகாரிகள் உண்மையைக் கண்டுபிடிக்கும் பணியில் இறங்கினர்.
சாக்கடையில் இருக்கும் வடிகால் ஓரத்தில் பெண்ணும் மேலும் சிலரும் வசிப்பதாக அவர்கள் சந்தேகித்தனர்.
சாக்கடைக் குழியிலிருந்து அவர்கள் அவ்வப்போது வெளியே வருவது கண்காணிப்புக் கேமரா பதிவுகளில் காணப்பட்டதாக Inquirer.Net ஊடகம் சொன்னது.
இதுவரை பெண் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
தாம் சாக்கடைக்குள் வசிக்கவில்லை என்று அவர் சொன்னார்.
குப்பை சேகரிக்கும் தொழில் செய்யும் அவர் தொலைந்த ஒரு பொருளைக் கண்டுபிடிக்க அங்குச் சென்றதாகவும் கூறினார்.
இருந்தாலும் கால்வாய்ப் பாதைகளுக்கு அருகே ஆடைகள் உட்பட சில பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
சிலர் சாக்கடைக் குழி வழியாகக் கால்வாய்ப் பாதைகளை அடிக்கடி பயன்படுத்துவதாகக் காவல்துறையினர் நம்புகின்றனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 6:28 pm
இந்தியா பாகிஸ்தான் மீண்டும் சண்டையிட்டால் வர்த்தக ஒப்பந்தம் கிடையாது: டிரம்ப் எச்சரிக்கை
June 1, 2025, 11:21 am
2025-ஆம் ஆண்டுக்கான உலக அழகியானார் தாய்லாந்தின் ஓபல் சுசாட்டா
June 1, 2025, 11:19 am
விமான நிலையத்தின் பெண்ணின் முக ஒப்பனையைக் கலைக்க சொன்ன அதிகாரிகள்
May 31, 2025, 4:58 pm
பாலியில் ஒரு லிட்டருக்கும் குறைவான தண்ணீர் பாட்டில்களுக்கு தடை
May 28, 2025, 3:40 pm