
செய்திகள் உலகம்
இலவசமாக பெறுவதால் நான் அரிசியை விலை கொடுத்து வாங்கியதில்லை: சர்ச்சைக்குரிய அறிக்கையால் ஜப்பானின் விவசாய அமைச்சர் பதவி விலகல்
டோக்கியோ:
இலவசமாக பெறுவதால் நான் ஒரு போதும் அரிசியை விலை கொடுத்து வாங்கியதில்லை என்ற ஓர் அறிக்கையை வெளியிட்ட பின்னர் ஜப்பானின் விவசாய அமைச்சர் டக்கு எட்டோ இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
நாடு உணவுப் பொருட்களின் விலைகளில், குறிப்பாக முக்கிய உணவான அரிசியின் விலையில் கூர்மையான உயர்வை எதிர்கொண்டுள்ள நேரத்தில் அவரது அறிக்கை பொதுமக்களின் கோபத்தைத் தூண்டியது.
நான் எனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் ஷிகெரு இஷிபாவிடம் சமர்ப்பித்துள்ளேன் என்று எட்டோ பிரதமர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஜப்பானிய அரசாங்கம் சமீபத்திய மாதங்களில் அதன் அவசரகால அரிசி இருப்புகளில் சிலவற்றை வெளியிட்டுள்ளது.
மேலும் எட்டோ முன்பு பயனீட்டாளர்கள் எதிர்கொள்ளும் துன்பத்திற்கு வருத்தம் தெரிவித்தார்.
இருப்பினும், கடந்த வார இறுதியில் பேரணி ஒன்றில் பேசிய எட்டோ, தனது ஆதரவாளர்கள் தனக்கு நிறைய அரிசிசை கொடுக்கின்றனர்.
அதை கிட்டத்தட்ட விற்கும் அளவிற்கு நான் தள்ளப்படுகிறேன். இதனால் நான் ஒருபோதும் சொந்தமாக அரிசி வாங்கவில்லை என்று கூறினார்.
இந்த அறிக்கை ஜப்பானிய மக்களிடையே சீற்றத்தைத் தூண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 6:28 pm
இந்தியா பாகிஸ்தான் மீண்டும் சண்டையிட்டால் வர்த்தக ஒப்பந்தம் கிடையாது: டிரம்ப் எச்சரிக்கை
June 1, 2025, 5:10 pm
சாக்கடையிலிருந்து ஊர்ந்து வந்த பெண் – பேய் படம் போல் காட்சி, காணொலி வைரல்
June 1, 2025, 11:21 am
2025-ஆம் ஆண்டுக்கான உலக அழகியானார் தாய்லாந்தின் ஓபல் சுசாட்டா
June 1, 2025, 11:19 am
விமான நிலையத்தின் பெண்ணின் முக ஒப்பனையைக் கலைக்க சொன்ன அதிகாரிகள்
May 31, 2025, 4:58 pm
பாலியில் ஒரு லிட்டருக்கும் குறைவான தண்ணீர் பாட்டில்களுக்கு தடை
May 28, 2025, 3:40 pm