நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அனைத்துலக புத்தாக்க சாதனையாளர் விருது: மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனத்திற்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது

கோலாலம்பூர்:

மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனத்திற்கு அனைத்துலக புத்தாக்க சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அனைத்துலக கலாச்சார, அமைதி, சுற்றுச்சூழல் அறக்கட்டளை இந்தியாவை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த அறவாரியத்தின் சிறப்பு விருது வழங்கும் விழா அண்மையில் தலைநகரில் நடைபெற்றது.

மலேசியாவைச் சேர்ந்த பல பிரமுகர்கள் சாதனையாளர்களுக்கு இவ்விழாவில் விருதுகள் வழங்கப்பட்டது.

இதில் மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனத்திற்கு அனைத்துலக புத்தாக்க சாதனையாளர் விருது கௌரவிக்கப்பட்டது.

மாஜூ ஜெயா வாரியக் குழுத் தலைவர் டத்தோ இப்ராஹிம் ஷா இந்த விருதை பெற்றுக் கொண்டார்.

மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம் தற்போது வளர்ச்சி பாதையை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக உறுப்பினர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இவ்விருது மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனத்திற்கு புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தந்துள்ளது.

ஆக வரும் காலங்களில் மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம் வெற்றி பாதையில் பயணிக்கும் என்று டத்தோ இப்ராஹிம் ஷா கூறினார்.

-  பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset