நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தெக்குனின் இஐபி திட்டம்; இந்திய சிறு, குறு வணிகர்களை மேம்படுத்தும்: டத்தோஸ்ரீ ரமணன்

ஷாஆலம்:

தெக்குன் நேஷனல் புதியதாக அறிமுகப்படுத்தியுள்ள இஐபி திட்டம் இந்திய சிறு,  குறு வணிகர்களை மேம்படுத்தும்.

இத்திட்டத்தை அறிவித்த தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமக்கிருஷ்ணன் இந்நம்பிக்கையை தெரிவித்தார்.

இந்திய சமூகத்திற்குள் சிறு, குறு வணிகர்களை மேம்படுத்தும் நோக்கில்  அரசாங்கம் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

இது சந்தையில் அவர்களின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இஐபி எனப்படும் இந்திய தொழில்முனைவோரை மேம்படுத்துதல்  என இப்புதிய திட்டம் அதாவது பயிற்சிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இப்புதிய திட்டம் மடானியின் பொருளாதார கொள்கைக்கு ஏற்ப, 

இந்திய சமூகத்தின் சமூகப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமையிலான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைக் காட்டுகின்றன.

மேலும் இந்திய சமூகத்தை பயனுள்ள வணிக மேலாண்மை திறன்களை மேம்ப்படுத்துவதுடன், கடன் நிதி வாய்ப்புகளுக்கான அணுகலை வழங்குவதற்கும் இப்பயிற்சித் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பி40 குழுவில் இருந்து விலகி தங்களை மேம்படுத்திக் கொள்ள அரசாங்கம் வழங்கும் வாய்ப்புகளை 40 வயதுக்குட்பட்டவர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தெக்குன் ஸ்பூமியிம் தொழில்முனைவோர் கருத்தரங்கில் பேசிய டத்தோஸ்ரீ ரமணன் இதனை கூறினார்.

இனத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து மலேசியர்களுக்கும் அரசாங்கம் பயிற்சி கருத்தரங்குகளை வழங்கும்.

குறிப்பாக மொழி விருப்பங்களுக்கு ஏற்ப தனித்தனி சமூகங்களுக்காக பயிற்சி அமர்வுகள் வடிவமைக்கப்பட்டன.

டெக்குன் சிறு, குறு தொழில்முனைவோரின் பொருளாதார மீள்தன்மையை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு உள்ளடக்கிய நிதி திட்டங்களை வழங்குகிறது.

1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து சிறு, குறு வணிகர்களுக்கு நிதியளிக்க 10.3 பில்லியன் ரிங்கிட் கடன்களை தெக்குன்  வழங்கியுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset