நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

யானையின் மென்மையான நடவடிக்கை நெட்டிசன்களின் இதயத்தை கவர்ந்தது

கோலாலம்பூர்:

சாலையோர செடிகளை மெதுவாக தின்றுக் கொண்டிருந்த ஒரு யானையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, சமூக ஊடக புயனர்களின் இதயத்தை கவர்ந்துள்ளது.

@_izzahmohd என்ற சமூக ஊடக பயனர் பகிர்ந்த வீடியோவில், வனவிலங்குகள் மற்றும் தேசிய பூங்கா துறையின் (Perhilitan)  லாரியில் கொண்டுச் செல்லப்பட்ட யானை, முதன்மை சாலையின் ஓரத்தில் தன் தும்பிக்கையின் உதவியால் சாலையோர செடியின் இலைகளை மெதுவாக பறித்து உண்ணும் காட்சி பதிவாகியுள்ளது.

இப்படியான சம்பவங்கள் வழக்கமாக வனப்பகுதிகளில் நடைபெறலாம். ஆனால் இது போல நகரப் பகுதியில், ஒரு பயணத்தின் போது நேர்ந்த சின்ன நிகழ்வும், யானையின் கனிவும், நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தன.

“மரங்களை முழுக்க முழுக்க ஓர் யானை களைந்து விட முடியும். ஆனால் இந்த யானையின் மென்மையான செயல் அதை சுவாரஸ்யமானதாக மாற்றியது,” என இஸாஹ் தன் பதிவு விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது 2.5 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளதோடு, பலரும் இதன் குறும்பான நடையைப் பாராட்டியுள்ளனர்.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset