நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிரியா நாட்டிற்கு எதிரான தடையை அகற்றினார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 

ரியாத்: 

சிரியா நாட்டிற்கு எதிரான தடையை அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அகற்றினார். 

கடந்த டிசம்பர் மாதம் பஷார் அல்-அசாத் தலைமையிலான சிரியா அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு தற்போது சிரியாவில் புதிய அரசாங்கம் ஆட்சி செய்து வருகிறது. 

சிரியாவின் இடைக்கால அதிபர் அஹ்மெத் அல்-ஷரா தலைமையில் சிரியா மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. 

இதனால் இதற்கு அமெரிக்கா விதித்திருந்த அனைத்து வகையிலான தடைகளையும் அமெரிக்கா ரத்து செய்யும். 

மேலும், அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ அடுத்த வாரம் சிரியா வெளியுறவு அமைச்சர் அசாத் அல்-ஷைபானியிடம் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று டிரம்ப் சொன்னார். 

அமெரிக்காவின் தடை நீக்கப்பட்டதால் சிரியா நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஒரு சிறந்த திருப்புமுனை ஏற்பட்டுள்ளதாக சிரியா வெளியுறவு அமைச்சு தெரிவித்தது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset