நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈராண்டுகளுக்குப் பிறகே ஆசிரியர்கள் பணி இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்க முடியும் : ஃபட்லினா சிடேக் திட்டவட்டம்

கூச்சிங்: 

ஈராண்டுகள் ஒரு பள்ளியில் பணியாற்றியப் பிறகு ஆசிரியர்கள் நிபந்தனைகள் இல்லாமல் பணி இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் இன்று அறிவித்துள்ளார். 

இவ்வாண்டு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வியமைச்சு ஆசிரியர்களுக்கு வெளியிட்டுள்ள 6 நற்செய்திகளில் இதுவும் ஒன்று என்று ஃபட்லினா கூறினார். 

மேலும், MH GoM அகப்பக்கம் வழியாக அனைத்து இடங்களுக்கும் ஆசிரியர்களுக்கான விமான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு 20 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும் என்று ஃபட்லினா குறிப்பிட்டார். 

அதனைத் தொடர்ந்து, கல்வியமைச்சகம் இவ்வாண்டு 1,470 பேரை உதவி ஆசிரியர்களாகப் பணியமர்த்தவுள்ளதாக ஃபட்லினா தெரிவித்தார். 

மேலும், நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு இரு உதவி ஆசிரியர்கள் பணியமர்த்தபடுவார்கள். 

அதுமட்டுமல்லாமல், இத்துறையில் சிறந்த சேவையையும் பங்களிப்பையும் வழங்கி அதற்கான விருதுகளைப் பெற்ற 32 ஆசிரியர்கள் உலகளாவிய  Immersion For Future-Ready Teachers (GIFT) திட்டத்தின் கிழ் யுனைடெட் கிங்டமிலுள்ள ஓர் அனைத்துலகப் பள்ளியில் இலவசமாக பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

தேர்ந்தெடுக்கப்பட்ட பல துறைகளில் கூடுதல் அறிவையும் அனுபவத்தையும் பெறுவதற்கான பயிற்சி திட்டங்களில் கலந்து கொள்ள கல்வி அமைச்சகம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார். 

MOE இன் DELIMa ஐடியைப் பயன்படுத்தி ஆன்லைன் கொள்முதல்களுக்கு 20 முதல் 30 விழுக்காடு வரை புத்தகம் வாங்குவதற்கு தள்ளுபடி வழங்கப்படுவதையும் அவர் சுட்டிக் காட்டினார். 

சரவாக் கூச்சிங்கில் அமைந்துள்ள போர்னியோ கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டப் பின் ஃபட்லினா இந்த 6 அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் சுமார் 5,000 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset