நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்க ஆசியர்களே காரணம்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

மருத்துவர், பொறியியாளர், பிரதமர் என இன்று ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்க அடித்தளம் அமைத்துக் கொடுத்த பெருமை ஆசிரியர்களையே சேரும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொருவரும் கல்வி கற்பதின் நோக்கத்தை அடைய உறுதுணையாகச் செயல்படும் ஆசிரியர்களுக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். 

ஆசிரியர்களின் உயர்ந்த மன உறுதியே இந்த நாட்டின் முக்கிய தலைவர்களை உருவாக்கியுள்ளது என்று அவர் கூறினார். 

தொடர்ந்து, நேர்மையுடனும் உறுதியுடனும் அறிவைப் புகட்டும் பணி, ஆசிரியர்களின் மகத்தானவை சேவையைக் குறிப்பதாகப் பிரதமர் அன்வார் புகழாரம் சூட்டினார்.  

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset