
செய்திகள் மலேசியா
மெட்ரிகுலேஷனில் 9A பெற்ற மாணவர்கள் புறக்கணிக்கப்படக்கூடாது: சிவராஜ் சந்திரன்
பெட்டாலிங் ஜெயா
எஸ்பிஎம்மில் 10 பாடங்களை எழுதவில்லை என்பதற்காக 9A பெற்ற மாணவர்களை தகுதி பட்டியலில் இருந்து தவிர்ப்பது கொடுமை என செனட்டர் சிவராஜ் சந்திரன் சாடியுள்ளார்.
எஸ்பிஎம் தேர்வில் 10A பெற்ற மாணவர்கள் நேரடியாக மெட்ரிக்குலேஷன் வாய்ப்பை பெறுவார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி என்றாலும், அதில் 9A பெற்ற பல மாணவர்கள் புறக்கணிக்கப்படுவது கொடூரமான வேதனை,” என அவர் தெரிவித்தார்.
நடுதர வர்த்தக்கத்தைச் சேர்ந்த மாணவர்கள், குறிப்பாக இஸ்லாம் அல்லாத மாணவர்கள், கட்டாயத் தேர்வாக 10 பாடங்கள் எழுத முடியவில்லை. அவர்களின் சூழ்நிலை, பள்ளி அமைப்பு, வழிகாட்டுதல்கள் அனைத்தும் 9 பாடங்களுக்குள் தான் அமைகின்றன. அதை நாம் ஏற்க வேண்டும் என சிவராஜ் சுட்டிக் காட்டினார்.
கல்வியில் பாகுபாடு கூடாது
9A பெற்ற மாணவர்களின் அடைவுநிலையில் A+, A, ஆகியவையும் அடங்கும். இது மற்றொரு தரப்பில் சிறந்த அடைவுநிலையாகக் கருதப்படுகிறது. எனவே 10 பாடங்களை எடுத்ததில்லை என்ற காரணத்திற்காக அவர்களை ஒதுக்குவது நியாயமற்றது” என அவர் கடுமையாக விமர்சித்தார்.
அதோடு, ‘A-’ தரத்தை ‘சிறந்த’ என்ற வரையறைக்குள் அடக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த நடைமுறையை மலேசிய ஆசிரியர் பயிற்சி கழகம் (IPGM) நடைமுறை படுத்தியுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கு முன்னர் மாணவர்களின் வலி, உழைப்பு, வெற்றி ஆகியவற்றை மதிக்க வேண்டும் என்றும், வெறும் வாசகங்கள் அல்லது பிரச்சாரங்களை வைத்தே கல்வி நிர்வாகம் நடத்தக்கூடாது என மஇகாவின் முன்னாள் இளைஞர் பிரிவித் தலைவருமான சிவராஜ் சந்திரன் கேட்டுக் கொண்டார்
-தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
June 1, 2025, 2:55 pm
அமைச்சரவையில் அவசரமாக மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை: பிரதமர்
June 1, 2025, 2:53 pm
புத்தக பற்றுச்சீட்டு திட்டம் 400,000 ஆசிரியர்களுக்கு விரிவுப்படுத்தப்படும்: பிரதமர்
June 1, 2025, 2:47 pm
பத்துகாஜாவில் கூடுதல் மருத்துவ வசதிகள் கொண்ட தாய்சேய் கிளினிக் அவசியமாகிறது: சிவக்குமார்
June 1, 2025, 2:45 pm
மலேசிய மாணவர்கள் ஜப்பானிய பணி கலாச்சாரத்தைப் படிக்க வேண்டும்: ஃபஹ்மி
June 1, 2025, 2:44 pm