
செய்திகள் கலைகள்
கம்பீரக் குரல் ஓய்ந்தது : வானொலி புகழ் வைரக்கண்ணு மறைவு
பெட்டாலிங் ஜெயா:
மலேசியா வானொலி துறையில் நீண்ட காலமாகத் திகில், மர்மம், உணர்ச்சி நிறைந்த நாடகங்களை உருவாக்கி, மலேசிய மக்களின் உள்ளங்களைக் கவர்ந்த வைரக்கண்ணு இன்று காலமானார்.
இந்தச் செய்தி வானொலி ரசிகர்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனித்துவமான குரல், அசாத்திய கற்பனை திறன், மனதைக் கொள்ளை கொள்ளும் கதை சொல்லல் என அனைத்தையும் ஒரே நேரத்தில் கொண்டு வந்தவர் வைரக்கண்ணு.
குறிப்பாக, 90-ஆம் 2 ஆயிரத்தாம் ஆண்டுகளில் அவரின் நாடகங்கள் ஒலிபரப்பானது என்றால் அந்த நேரத்தில் மக்கள் அனைத்தையும் விட்டு வானொலி பக்கம் திரும்பி நின்றனர்.
அவரது குரல் சப்தமிட்ட உடனே கதையின் திகில் நேரடியாகக் காதுகளில் பாயும்
மலேசியக் கலைத்துறையில் வைரக்கண்ணு ஓர் அடையாளமாக வலம் வந்தார். அவரது எழுத்துக்கள், தயாரிப்புகள், குரல் என்று பன்முகக் கலைஞராக விளங்கினார்.
பல தலைமுறைகளுக்கு வானொலி நாடக கலையை புதிய பாணியில் அறிமுகப்படுத்திய வாழ்ந்த நாயகன்.
அவரது பணிகள் மலேசிய தமிழ் வானொலியின் பொக்கிஷமாகவே தொடர்ந்து பாராட்டப்படும்.
அவர் இல்லாத வெற்றிடத்தை எவராலும் எளிதில் நிரப்ப இயலாது என்பதே உண்மை.
அவரின் குடும்பத்தாருக்கு நம்பிக்கை குழுமம் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
June 29, 2025, 5:45 pm
பாதுகாப்பு காரணங்களுக்காக Mercedes Maybach GLS 600 புல்லட் புரூப் கார் வாங்கிய சல்மான்கான்
June 27, 2025, 8:37 pm
ஆமிர் கானின் தங்கல் படத் தடைக்கு தற்போது வருந்தும் பாகிஸ்தான்
June 26, 2025, 2:52 pm
போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்
June 26, 2025, 2:27 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தின் முதல் பாடல் வெளியானது
June 25, 2025, 4:16 pm
சினிமாவில் பல நாட்களாக போதைப்பொருள் பயன்பாடு உள்ளது: நடிகர் விஜய் ஆண்டனி பரபரப்பு தகவல்
June 25, 2025, 4:11 pm
பிரான்ஸ் இசை விழாவில் 150 பேர் ஊசியால் குத்தப்பட்டனர்
June 25, 2025, 11:06 am
80க்கும் மேற்பட்ட மாணவக் கலைஞர்களின் படைப்புகளுடன் பத்துமலையில் பிரமாண்ட இசை கதம்பம்
June 24, 2025, 4:26 pm