
செய்திகள் உலகம்
சிறந்த சமூகத்தை உருவாக்க அங் மோ கியோ குடியிருப்பாளர்களுடன் பணியாற்றுவோம்: மூத்த அமைச்சர் லீ
சிங்கப்பூர்:
மூத்த அமைச்சர் லீ சியென் லூங் தமது அணி அங் மோ கியோ குடியிருப்பாளர்களுடன் அணுக்கமாய்ச் செயல்பட்டு இன்னும் சிறந்த சமூகத்தை உருவாக்கும் என்று கூறியுள்ளார்.
சிங்கப்பூருக்கு மேலும் சிறந்த வகையில் பங்களிப்பதற்கும் முயற்சிகள் எடுக்கப்படும் என்றார் அவர்.
அங் மோ கியோவில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வெளியே முதலில் திரு லீ குடியிருப்பாளர்களைச் சந்தித்தார்.
பிறகு பேருந்தில் அவரும் குழுவினரும் அங் மோ கியோவைச் சுற்றி வெற்றி உலாச் சென்றனர்.
ஜாலான் காயு, கெபுன் பாரு, இயோ சூ காங் ஆகிய தொகுதிகளில் வெற்றிபெற்றவர்களும் அவர்களுடன் சேர்ந்து தத்தம் தொகுதிகளுக்குச் சென்று மக்களுக்கு நன்றி கூறினர்.
நடந்து முடிந்த சிங்கப்பூர் நாட்டின் பொதுத்தேர்தலில் ஆளும் பி.ஏ.பி கட்சி 87 இடங்களை வென்று ஆட்சியைத் தக்க வைத்து கொண்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 6:28 pm
இந்தியா பாகிஸ்தான் மீண்டும் சண்டையிட்டால் வர்த்தக ஒப்பந்தம் கிடையாது: டிரம்ப் எச்சரிக்கை
June 1, 2025, 5:10 pm
சாக்கடையிலிருந்து ஊர்ந்து வந்த பெண் – பேய் படம் போல் காட்சி, காணொலி வைரல்
June 1, 2025, 11:21 am
2025-ஆம் ஆண்டுக்கான உலக அழகியானார் தாய்லாந்தின் ஓபல் சுசாட்டா
June 1, 2025, 11:19 am
விமான நிலையத்தின் பெண்ணின் முக ஒப்பனையைக் கலைக்க சொன்ன அதிகாரிகள்
May 31, 2025, 4:58 pm
பாலியில் ஒரு லிட்டருக்கும் குறைவான தண்ணீர் பாட்டில்களுக்கு தடை
May 28, 2025, 3:40 pm