நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நிலவில் முதன் முதலில் கலைப்படைப்பைக் காட்சிக்கு வைத்த Paul Van Hoeydonck காலமானார்

புருசல்சஸ்:

நிலவில் முதன் முதலில் கலைப்படைப்பைக் காட்சிக்கு வைத்த Paul Van Hoeydonck காலமானார்.

அவரின் மறைவு செய்தியைக் குடும்பத்தினர் முகநூல் பதிவில் தெரிவித்தனர்.

பெல்ஜியத்தைச் சேர்ந்த 99 வயதான Paul Van Hoeydonck 1925-ஆம் ஆண்டு அக்டோபர் 8-ஆம் தேதி பிறந்தார். 

தனது வாழ்நாளில் சிற்பங்கள் செய்வது, வரைவது, ஓவியம் தீட்டுவது எனப் பல்வேறு கலைப்படைப்புகளை உருவாக்கியிருந்தாலும் பல ஆண்டுகளாக அவரது "Fallen Astronaut" என்ற கலைப்படைப்பு மட்டுமே நிலவில் இருந்தது.

1971ஆம் ஆண்டு அப்போலோ 15 விண்கலத்தில் சென்றோர் அந்தப் படைப்பை நிலவில் விட்டுவந்தனர்.

விண்வெளி ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது மாண்ட 14 விண்வெளி வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அந்தப் படைப்பு நிலவில் வைக்கப்பட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset