நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அந்த்ராக்ஸ் நோயால் முதல் மரணம் மக்கள் பீதியடைய வேண்டாம்: தாய்லாந்து

பேங்காக்:

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அந்த்ராக்ஸ் நோயால் தாய்லாந்தில் முதல் மரணம் பதிவாகி உள்ளது.

இதை தொடர்ந்து பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று தாய்லாந்து சுகாதார அமைச்சு  வலியுறுத்தியது.

மண்ணில் உள்ள பாக்டீரியாக்களால் இந்த அந்த்ராக்ஸ்  பரவுகிறது.

பொதுவாக கால்நடைகள்,  புல் மேயும் காட்டு விலங்குகளைப் பாதிக்கிறது.

ஆனால் தோல் புண்கள், கொப்புளங்கள், வீங்கிய நிணநீர் சுரப்பிகள் போன்ற அறிகுறிகளுடன் மனிதர்களைக் கொல்லக்கூடும்.

லாவோஸின் எல்லைக்கு அருகிலுள்ள முக்தஹான் மாநிலத்தில் இறந்த பசுவைக் உண்டதாக கூறப்படும் 53 வயது நபர் இறந்தார்.

இதனால் நாட்டின் வடகிழக்கில் பிரதான உணவான பச்சை இறைச்சியை சாப்பிடுவதைத் தவிர்க்குமாறு தாய்லாந்து மக்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset