நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் 14ஆவது முறையாக வெற்றிபெற்ற ஆளும்கட்சி: பிரதமர் பதவியில் தொடரும் வோங்

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஆளும் மக்கள் செயல் கட்சி 14ஆவது முறையாக வெற்றியை பெற்றுள்ளது.

1965ஆம் ஆண்டு சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றதிலிருந்தே ஆட்சியை வகித்து வரும் மக்கள் செயல் கட்சி, 

இம்முறை 97 இடங்களில் 87 இடங்களை வென்று தன்னுடைய ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.

தற்போதைய பிரதமர் லாரன்ஸ் வோங், கடந்த வருடம் சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பொறுப்பேற்றிருந்தார்.

இத் தேர்தலில் அவர் வெற்றி பெற்று, தனது பதவியை உறுதிப்படுத்தியுள்ளார்.

மொத்த வேட்பாளர்களில் 46 சதவீதம் பேர் மக்கள் செயல் கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்ட மக்கள் செயல் கட்சி, அதன் வலிமையை நிரூபித்தது.  

எதிர்க்கட்சியான பிரீத்தம் சிங் தலைமையிலான எதிர்க்கட்சி 26 தொகுதிகளில் போட்டியிட்டு 10ல் வெற்றி பெற்றது.

ரவி பிலிமேன் தலைமையிலான ஆர்டியு கட்சி 15 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியடைந்தது.

உங்கள் வலுவான ஆதரவுக்கு நன்றி. இதை நாங்கள் மதிப்புடன் ஏற்றுக்கொள்கிறோம் என்று பிரதமர் வோங் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset