நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தாய்லாந்தில் ஆந்த்ராக்ஸ் தொற்று காரணமாக முதல் மரணம் பதிவாகியுள்ளது

பேங்காக்:

தாய்லாந்தில் ஆந்த்ராக்ஸ் தொற்று காரணமாக முதல் மரணம் பதிவாகியுள்ளது.

இது கொடிய பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நபர்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளது.

இதை தொடர்ந்து பொது சுகாதார எச்சரிக்கையைத் தூண்டியதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

லாவோஸ் எல்லைக்கு அருகிலுள்ள வடகிழக்கு தாய்லாந்தில் உள்ள முக்தஹான் மாநிலத்தில் 53 வயது நபர் ஒருவர் புதன்கிழமை ஆந்த்ராக்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

அதே நேரத்தில் அதே மாநிலத்தில் இரண்டாவது வழக்கு உறுதி செய்யப்பட்டது.

கூடுதலாக தொற்றுநோய் தொடர்பான மூன்று சந்தேகத்திற்கிடமான வழக்குகளும் விசாரணையில் உள்ளன.

குறிப்பாக பச்சை இறைச்சியை சாப்பிட்ட பிறகு குறைந்தது 638 பேர் இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset