நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நாளை மே 3ஆம் தேதி சிங்கப்பூர் பொதுத்தேர்தல்: தகுதிப்பெற்ற 2.76 மில்லியன் சிங்கப்பூர் வாக்காளர்கள் நாளை வாக்களிக்கவுள்ளனர்

சிங்கப்பூர்: 

நாளை மே 3ஆம் தேதி சிங்கப்பூர் நாட்டின் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. 

சிங்கப்பூர் நாட்டின் 97 நாடாளுமன்ற இடங்களுக்குப் போட்டி என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் 5 இடங்களில் போட்டியின்றி PAP கட்சி வேட்பாளர்கள் வெற்றிப்பெற்றுள்ளனர். 

மீதமுள்ள 92 நாடாளுமன்ற இடங்களுக்குப் போட்டி நிலவுவதால் 2.76 மில்லியன் மக்கள் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றவுள்ளனர். 

இந்த பொதுத்தேர்தலில் 211 வேட்பாளர்கள் போட்டியிடும் வேளையில் 46 விழுக்காட்டினர் வேட்பாளர்கள் PAP கட்சியைப் பிரதிநிதித்துள்ளனர். 

கடந்த 1965ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் PEOPLE ACTION PARTY  கட்சி ஆட்சி செய்து வருகிறது. 

சிங்கப்பூர் நாட்டில் வாக்கு செலுத்துவது என்பது கட்டாயமாக்கப்பட்ட சட்டமாகும்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset