நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாகிஸ்தான் நாட்டு விமானங்கள் இந்திய வான்வெளியில் பறந்து செல்ல தடை விதிப்பு 

கராச்சி: 

இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமாக சூழல் நிலவி வருகிறது. 

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டில் பதிவு செய்யப்பட்ட அனைத்து விமானங்கள், பாகிஸ்தானிய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் விமானங்கள், ராணுவ விமானங்கள் யாவும் இந்திய வான்வெளியில் பறந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 30 முதல் மே 23ஆம் தேதி வரை இது அமலில் இருக்கும் என்று இந்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது. 

இந்த சூழலில், மே மாதத்தில் பாகிஸ்தானில் கராச்சி மற்றும் லாகூர் வான்வெளியின் குறிப்பிட்ட பகுதியை ஒரு குறிப்பிட்ட நேரம் வரை தினசரி மூட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. 

அடுத்த 24 முதல் 36 மணிநேரத்தில் இராணூவ நடவடிக்கையைத் தொடங்க இந்தியா தயாராகி வருகிறது என்று பாகிஸ்தான் அரசு குறிப்பிட்டது. 

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு வெடித்துள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset