நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்  பொறுப்பிலிருந்து மைக் வால்ட்ஸ் நீக்கம்: அதிபர் டொனால்டு டிரம்ப் நடவடிக்கை 

வாஷிங்டன்: 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸை நீக்கி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். 

இந்நிலையில், அமெரிக்காவின் வெளியுறவு செயலாளரான மார்கோ ரூபியோ இடைக்கால பாதுகாப்பு ஆலோசகராக டொனால்டு டிரம்ப் நியமித்துள்ளார். 

இந்த தகவலை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டார். மேலும், மைக் வால்ட்ஸ் ஐநாவுக்கான அடுத்த அமெரிக்க தூதராக நியமிப்பதாக கூறினார். 

முன்னதாக, வால்ட்ஸை தனது தேசிய பாதுகாப்பு பதவியில் இருந்து நீக்க டிரம்ப் முடிவு செய்ததாக பல செய்தி வட்டாரங்கள் தெரிவித்தன.

1970 களில் ஹென்றி கிஸ்ஸிங்கருக்குப் பிறகு ஒரே நேரத்தில் வெளியுறவு செயலாளர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிகளை வகிக்கும் முதல் நபர் மார்கோ ரூபியோ ஆவார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset