நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொழிலாளர் தினத்துடன் மலேசியாவின் வளர்ச்சியில் இந்திய சமூகத்தின் பங்கு பாராட்டுக்குரியது: டத்தோஶ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

தொழிலாளர் தினத்துடன் இணைந்து நாட்டை வளர்ப்பதில் இந்திய சமூகத்தின் முக்கிய பங்கைப் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்.

தொழில்முனைவோர் மேம்பாடு,  கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

மலேசியாவில் உள்ள இந்திய சமூகம் நிர்வாகம், பொது சேவைகள், வணிகத் துறை, பொழுதுபோக்கு, கல்வி, உணவு, பிற தொழில்முறை துறைகளில் எப்போதும் முன்னணியில் உள்ளனர்.

குறிப்பாக நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது  என்று  இந்திய சமூகத்தின் விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்புள்ள அவர் கூறினார்.

மலேசியா மிகவும் துடிப்பான நாடு. இங்கு அனைத்து இனங்கள், மதங்கள், தேசிய இனங்கள் நாட்டின் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதில் இந்திய சமூகமும் முக்கிய பங்கை ஆற்றுகிறது.

இந்திய சமூகத்தைச் சேர்ந்த பல முக்கிய நபர்கள் பொது சேவை, அரசியல், வணிகம், அரசு சாரா நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆழ்ந்த பங்களிப்புகளையும் தியாகங்களையும் செய்துள்ளனர்.

உண்மையில், பல தலைவர்களும் தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் என்று அவர் இன்று தொழிலாளர் தினத்துடன் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் அவர்  தெரிவித்தார்.

இன்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, தேசிய வளர்ச்சி செயல்பாட்டில் இந்திய சமூகம் ஆற்றிய அனைத்து முக்கிய பங்குகளையும் நான் பாராட்ட விரும்புகிறேன்.

மலேசியர்களாகிய நாம் ஒன்றாக இந்த நாட்டைக் கட்டமைக்கிறோம். இதுவே மலேசியாவின் ஒற்றுமையின் மதிப்புகளின் பலம்.

மேலும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமையிலான அரசாங்கம், மடானி மலேசியாவின் கொள்கைக்கு ஏற்ப, நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் தலைவிதியை அதிகாரம் அளிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset