
செய்திகள் மலேசியா
மடானி அட்டையை கொண்டிருக்கும் ஒரு மில்லியன் தொழிலாளர்களுக்கு 30% வரை தள்ளுபடிகள்: பிரதமர்
கோலாலம்பூர்:
மடானி தொழிலாளர் அட்டையை கொண்டிருக்கும் ஒரு மில்லியன் தொழிலாளர்களுக்கு 30% வரை தள்ளுபடிகள் வழங்கப்படவுள்ளன.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை அறிவித்தார்.
அத்தியாவசிய பொருட்கள், சேவைகளை வழங்கும் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 30% வரை தள்ளுபடியுடன் ஒரு மில்லியன் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு பயனளிக்கும் மதனி தொழிலாளர் அட்டையை அரசாங்கம் அறிமுகப்படுத்துகிறது.
ஏயோன், மைடின், ஜேக்கல், மேரிபிரவுன், ஜென்டிங், ஓல்ட் டவுன், ஷூஸ் காஃபி, சோக்கர், பேட்டரிகு ஆகியவை இந்த தள்ளுபடிகள் வழங்கும் நிறுவனங்களில் அடங்கும்.
தொழிற்சங்க உறுப்பினர்கள் தள்ளுபடிகளை அனுபவிக்க இடம் வழங்குவதே இந்த தொழிலாளர் அட்டையாகும்.
புக்கிட் ஜாலில் அக்ஸியட்டா அரங்கில் நடைபெற்ற 2025 தொழிலாளர் தின கொண்டாட்டத்தில் பிரதமர் இதனை அறிவித்தார்.
ஒரு சிறந்த, போட்டி நிறைந்த தேசத்தை உருவாக்குவதில் தொழிலாளர்களின் பங்கு முக்கியமானதாகும்.
தொழிற்சாலைகள், அரசுத் துறைகள், மருத்துவமனைகள், பள்ளிகள், காவல் நிலையங்கள் அல்லது எந்தவொரு துறையிலும் பணிபுரியும் ஒவ்வொரு நபரும் மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் தேசிய வெற்றியை அடைவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
இந்த நாடு இன்னும் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது.
நமது நாட்கள் பாலஸ்தீன நெருக்கடி, அமெரிக்கா போன்ற பெரிய சக்திகளின் தன்னிச்சையான நடவடிக்கைகள் உட்பட உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் போன்ற முக்கிய பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm