நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அனைவரும் ஆபத்தில் இருப்பதாக உணரும்போது மட்டுமே மலாய்க்காரர்கள் ஒன்றுபட முடியும்: துன் மகாதீர்

கோலாலம்பூர்:

மலாய்க்காரர்கள் பொதுவான பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது மட்டுமே ஒன்றுபடுவார்கள்.

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது இதனை கூறினார்.

மலாயன் ஒன்றியத்திற்கு எதிரான கடுமையான எதிர்ப்பைக் குறிப்பிட்ட அவர், மலாய்க்காரர்கள் அந்தந்த மாநிலங்கள் தொடர்பான விஷயங்களில் மட்டுமே அக்கறை கொண்டிருந்தனர்.

மலாய்க்காரர்கள் ஒன்றுபடுவதில் இருந்த சிரமத்தின் வரலாற்றை வெளிப்படுத்தியதுடன் அவர்கள் தங்கள் சொந்த மன்னர்களுடன் சிறிய தனி நாடுகளை நிறுவினர், அவர்கள் ஒரு தேசத்தை நிறுவவில்லை.

வடக்கு மலாயாவில் உள்ள நான்கு மலாய் மாநிலங்கள் ஆங்கிலேயர்களால் தாய்லாந்திடம் ஒப்படைக்கப்பட்டபோது, ​​யாரிடமிருந்தும் எந்த எதிர்ப்பும் வரவில்லை என்று அவர் கூறினார்.

1909 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் பேங்காக்கிற்குக் கொடுக்கப்பட்ட வெள்ளை யானை நாட்டின் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருக்கும் பட்டானி, சிங்கோர, மெனாரா, யாலா ஆகியவற்றின் இழப்பை மகாதிர் குறிப்பிட்டார்.

இருப்பினும், இது ஒரு மலாய் நாடு.

எனவே, ஆங்கிலேயர்கள் மலாய் மாநிலங்களைக் கைப்பற்றி மலாயன் ஒன்றியத்தை உருவாக்க முன்மொழிந்தபோது, ​​அனைத்து மலாய் மாநிலங்களும் அதே பிரச்சனையை எதிர்கொள்ளும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset