நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசியக் கூட்டணி யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்; தோல்விக்கான சாக்குப் போக்குகளை உருவாக்கக்கூடாது: ஜம்ரி

மஞ்சோங்:

ஆயிர் கூனிங்  இடைத் தேர்தலில் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக இல்லாததைத் தொடர்ந்து, தேசியக் கூட்டணி உண்மைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பொருத்தமற்ற சாக்குப்போக்குகளை உருவாக்கக்கூடாது தேசிய முன்னணி பொதுச் செயலாளர்  டத்தோஶ்ரீ ஜம்ரி அப்துல் காதிர் கூறினார்.

தேசிய முன்னணி 18,000 வாக்குகளைப் பெற வேண்டும் என்ற அதன் இலக்கை தடுப்பதில் தேசியக் கூட்டணி வெற்றி பெற்றதாக வெளியான அறிக்கை, எதிர்க்கட்சியின் மோசமான செயல்திறனை மறைப்பதற்கான ஒரு சாக்குப்போக்கு என்று 

பாஸ் போட்டியிட்ட இடைத்தேர்தலில் தோல்விக்கான உண்மையான காரணத்தை ஆராய, தேசியக் கூட்டணி தலைவர்கள் ஒரு பிந்தைய மதிப்பீட்டு செயல்முறையை நடத்த வேண்டும்.

தேசிய முன்னணி ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்தாலும் முந்தைய தேர்தல்களின் முடிவுகள் குறித்து உரிய ஆய்வுகளை நடத்தும்,

மாறாக அந்த தோல்விக்கான காரணத்தை தேடாது என்று மஞ்சோங்கில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோஶ்ரீ ஜம்ரி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset