
செய்திகள் மலேசியா
தாமான் ஶ்ரீ மூடாவில் மீண்டும் வெள்ளம்: வீடுகள், சாலைகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது
ஷாஆலாம்:
தாமான் ஶ்ரீ மூடாவில் மீண்டும் வெள்ளம் ஏறிய நிலையில் வீடுகள், சாலைகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது.
அதிகாலை முதல் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து சிலாங்கூர் மாநிலத்தில் பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுங்கைபூலோ, சுபாங், பெட்டாலிங் ஜெயா பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதே வேளையில் கிள்ளான் பள்ளத்தாக்கின் பல சாலைகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் இந்த கனமழையைத் தொடர்ந்து தாமான் ஶ்ரீ மூடாவில் மீண்டும் வெள்ளம் ஏறியுள்ளது.
ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததை தொடர்ந்து வெள்ள நீர் வீடுகளில் புகுந்துள்ளது.
அதே வேளையில் பெரும்பாலான சாலைகளும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.
இதனிடையே தாமான் ஶ்ரீ மூடா வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 11:33 pm
மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கு; 48 மணி நேரத்திற்குள் தீர்க்கப்பட்டது: ஹுசைன் ஒமார் கான்
July 1, 2025, 11:28 pm
ஹிஷாமுடினின் இடைநீக்கம் குறித்து அம்னோ உச்சமன்றம் விவாதிக்கவில்லை: ஜாஹித்
July 1, 2025, 10:48 pm
பள்ளிக்கு முன் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆடவர் உயிர் தப்பினார்
July 1, 2025, 1:08 pm