நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளிவாசல் நிதி திருட்டு; 3 பேருக்கு 6 மாத சிறைத்தண்டனை, 4,000 ரிங்கிட் அபராதம்

ஷாஆலம்:

ஷாஆலம் செக்சன் 7 இல் உள்ள ஒரு  பள்ளிவாசல் நிதியைத் திருடியதாக 17 வயது இளைஞன் உட்பட நான்கு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அவர்களில் மூன்று பேர் அதாவது கே. தினேஷ்வரன், 26, ஆர். நிஷான்ராஜ், 22, எஸ்.ஆர். தனேஷ், 27, ஆகியோர் மாஜிஸ்திரேட் முகமது சயாபிக் சுலைமான் முன் குற்றம் சாட்டப்பட்டனர்.

அதே நேரத்தில் 17 வயது இளைஞன் மீது மூடிய விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டது.

பிப்ரவரி 22 அன்று அதிகாலை 4 மணியளவில், கூட்டாகக் குற்றத்தைச் செய்த குற்றச்சாட்டில் அனைத்து குற்றவாளிகளும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 380 இன் கீழ் வழக்குத் தொடரப்பட்டது.  இது அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் மற்றும் மீண்டும் மீண்டும் குற்றங்களைச் செய்தால், அபராதம் அல்லது சவுக்கடியுடன் கூடிய சிறைத்தண்டனை ஆகியவற்றை வழங்குகிறது.

குற்றவாளிகள் மீதான குற்றச்சாட்டின்படி, முஹம்மது சஃபிக் மூன்று குற்றவாளிகளுக்கும் இன்று முதல் ஆறு மாத சிறைத்தண்டனையும், 4,000 ரிங்கிட் அபராதமும் விதித்தார்.

மூன்று குற்றவாளிகளும் அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக மூன்று மாத சிறைத்தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டது.

சிறார் குற்றவாளிகளைப் பொறுத்தவரை, குற்றம் சாட்டப்பட்டவர்களை ஒரு உத்தரவாதத்துடன் 1,500 ரிங்கிச்ச்பிணையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.

மேலும்  சமூக நலத்துறை குணநல அறிக்கையை சமர்ப்பிக்க ஏப்ரல் 28 ஆம் தேதி நிர்ணயித்தது.

வழக்குத் தொடுப்பு துணை அரசு வழக்கறிஞர் முவாஸ் கவாரிஸ்மி அஸ்பர் தலைமையில் நடைபெற்றது.

அதே நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் வழக்கறிஞர்களான ஸ்விந்தர் சிங், அஷ்ருல் ஹைகல் ஆகியோரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset