நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிகேஆர் கட்சி தேர்தலுக்குப் பின் அமைச்சரவையில் மாற்றம் இருக்காது: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டம்

கோலாலம்பூர்: 

பிகேஆர் கட்சித் தேர்தலுக்குப் பிறகு அமைச்சரவையில் மாற்றம் வராது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக தெரிவித்தார் 

பிகேஆர் கட்சியைச் சேர்ந்த முன்னணி அமைச்சர்கள், துணையமைச்சர்கள் கட்சித் தேர்தலில் தோல்வி அடைந்திருக்கும் நிலையில் அமைச்சரவை மாற்றம் ஏற்படும் என்று வதந்திகள் பரவின. 

பிகேஆர் கட்சி தேர்தல் என்பது உள்கட்சி விவகாரமாகும். இதனால் மத்திய, மாநில அரசாங்கங்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று தம்பூன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார். 

முன்னதாக, பிகேஆர் கட்சித் தேர்தலில் நிக் நஸ்மி நிக் அஹ்மத், அக்மால் நசீர், அடாம் அட்லி ஆகியோர் தோல்வியைத் தழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset