
செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஒன்றிய அரசின் டீசல் விலையேற்றம், சுங்கக் கட்டண உயர்வைக் கண்டித்து, லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம்
ஓசூர்:
டீசல் மற்றும் சுங்கக் கட்டண உயர்வைக் கண்டித்து, கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியது. இதனால், ஓசூர் அருகே தமிழக லாரிகள் பல மணி நேரம் நிறுத்தப்பட்டிருந்தன.
கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் காரணமாக நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் தமிழக பதிவெண் கொண்ட லாரிகள் அனைத்தும், தமிழக எல்லையான ஓசூர் ஜுஜுவாடியில் நிறுத்தப்பட்டன.
அதேநேரம், வடமாநிலங்களிலிருந்து கர்நாடகா வழியாக வடமாநில பதிவெண் கொண்ட லாரிகள் ஓசூர் வழியாக வழக்கம்போல இயங்கின. இந்நிலையில், நேற்று காலை 10 மணிக்கு மேல் தமிழக-கர்நாடக எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக பதிவெண் கொண்ட லாரிகள் படிப்படியாக இயக்கப்பட்டன.
இதனிடையே, கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் உள்ள அம்மாநில வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர், அம்மாநில போக்குவரத்து இணை ஆணையர் ஷோபாவிடம் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
தென் மாநில லாரி உரிமையாளர்கள் நலச் சங்க பொதுச் செயலாளர் சண்முகப்பா கூறும்போது, டீசல் விலையைக் குறைக்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2025, 12:26 pm
வட சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை
September 13, 2025, 2:27 pm
விஜய் வருகையால் அதிர்ந்த திருச்சி: மரக்கடை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
September 13, 2025, 7:32 am
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
September 12, 2025, 9:08 pm
நேபாளத்தில் சிக்கிய 116 தமிழர்கள் மீட்பு; எஞ்சியோரை அழைத்துவர நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் தகவல்
September 11, 2025, 10:54 pm
ஆடு, மாடு மாநாடு தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெறும்: சீமான்
September 10, 2025, 1:43 pm
செப்.13 முதல் டிச.20 வரை விஜய் சுற்றுப்பயணம்: அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் தவெக மனு
September 9, 2025, 12:07 pm
ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்
September 8, 2025, 6:16 pm